1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (15:40 IST)

5 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு..!

நிர்வாகத்தின் வசதிக்காகவும் அதிகாரிகளின் விருப்பத்திற்காகவும் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சற்று முன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
1. பிருந்தா - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம்
 
2. அய்மன் ஜமால் - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமனம்
 
3. சுகுணாசிங் - காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக நியமனம்
 
4. கவுதம் கோயல் - பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர்
 
5. பாஸ்கரன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட்
 
இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran