1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:42 IST)

குமரிக்கடலில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மாயம்: தேடும் பணியில் கடலோர காவல்படை!

TN Fishermen
குமரி கடலில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்று கூறப்படுகிறது 
 
இது குறித்த தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர் என்றும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலைதான் உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
மூன்று நாட்களுக்கு முன்னர் கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் திடீரென மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran