1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:14 IST)

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது..! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..!!

fisherman
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை, எல்லை தாண்டி வந்ததாக கூறி,  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றன.  இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 

 
கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்துள்ள சம்பவம், மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.