1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (13:14 IST)

19 வயது பையனை வேட்பாளராக களமிறக்கியதா மக்கள் நீதி மய்யம்?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளன. இதனால் கட்சிகள் பரபரப்பாகி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் 23 ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அழைத்துவரப்பட்ட நபருக்கு 19 வயதுதான் நிரம்பி இருந்துள்ளது. ஆனால் தேர்தல் அதிகாரிகள் போட்டியிட வேண்டும் என்றால் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என கூறியதால் அந்த இளைஞர் அங்கிருந்து அடித்து பிடித்துக் கொண்டு ஓடியதாக சொல்லப்படுகிறது.