1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (16:09 IST)

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து பூஜை அறை அண்டாவில் மறைத்து வைத்த வாலிபர் கைது

ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை பிளேடால் அறுத்து வீட்டின் பூஜை அறையில் உள்ள அண்டாவுக்குள் மறைத்து வைத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த தெலுங்கனூர் பகுதியில் 7 வயது சிறுமி முன் காணாமல் போனதை அடுத்து பெற்றோர்கள் பல இடங்களுலும் தேடி வந்தனர். இந்நிலையில், பக்கத்து வீட்டில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டாள்.
 
விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது வாலிபர், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை பிளேடால் அறுத்து வீட்டின் பூஜை அறையில் உள்ள அண்டாவுக்குள் மறைத்து வைத்துள்ளார்.
 
கொளத்தூர் காவல்துறையினர் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர், ஏற்கனவே இது போன்று அப்பகுதி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
சிறுவன் திங்களன்று சேலம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவன் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டான்.