1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (12:31 IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்கள் மழை பெய்யும்.