தேவதைகளின் தேவதை. எதற்காக நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய். பேசாமல் வாசலிலேயே சிறுது நேரம் உட்கார்ந்திரு போதும். **************** நீ குளித்து முடித்ததும் துண்டெடுத்து உன்கூந்தலில் சுற்றிக் கொள்கிறாயே... அதற்குப் பெயர்தான் முடி சூட்டிக்கொள்வதா. *************** தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக ஒரு முறை சரி செய்யும் ஓவியனைப்போல நீ ஒவ்வொரு முறையும் சரிசெய்கிறாய் உன் உடையை. *************** இலைகள் காய்ந்தால் உயிர் உள்ள கொடியும் பட்டுப் போகிறது. உன் உடைகள் காய்ந்தால் உயிரற்ற கொடியும் உயிர் பெறுகிறது. ************** நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும்..... எனக்கும் செத்துவிடத் தோன்றியது