1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முளைகட்டிய வெந்தயத்தை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

வெந்தய விதைகளை 3 நாட்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவை முளைகட்டிய வெந்தயமாக கிடைக்கும். அதன் மீது, மிளகுத் தூள் அல்லது உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது சாலட்களுடன் முளைகட்டிய வெந்தயத்தை சேர்த்தும். அல்லது பச்சையாகவும் அப்படியே சாப்பிடலாம்.

முளைகட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்பட்ட நீரிழிவு நோய் குணமாகும். மேலும், வெந்தயம் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் குளுக்கோஸை மெதுவாக செயல்பட செய்யும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. 
 
தசைகள் மற்றும் மூட்டுகளை நல்ல நிலையில் வைத்திருக்க முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்ளலாம். முளைத்த வெந்தயத்தில் பிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்றவை உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. 
 
முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு நிலைகள் மேம்படுகின்றன. முளைக்கட்டிய வெந்தயம் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து சமநிலைப்படுத்துகிறது. அதோடு, கொழுப்பைக் குறைக்கவும், இரத்தத்தில் கொழுப்பு படிவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு அபாயங்கள் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
 
முளைக்கட்டுவதற்கு வெந்தயத்தை ஊறவைப்பதால் அவை மென்மை அடைகின்றன. இதனால் எளிதாக மற்றும் வேகமாக செரிமானம் நிகழும். முளைக்கட்டிய வெந்தயம் கணையத்தில் பீட்டா செல்கள் உருவாவதை மேம்படுத்துகிறது.
 
அமிலத்தன்மை, வாய்வு, வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நல்லது.