1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட உணவில் எள்ளு சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா...?

வாய்ப்புண் உள்ளவர்கள்  பலம் குறைவா இருக்கறவங்க எல்லாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்து துப்பினாலும் போதும் இந்த பிரச்சனையெல்லாம் தீரும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளுகலந்த உணவை சாப்பிட்டால் சர்க்கரை குறைக்கும்  இது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு எள்ளையும் உளுந்தையும் சேர்த்து கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரமா வயதுக்கு வந்திடுவார்கள்.
 
எள்ளோட விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் போதும் மூலநோய் குறையும் மூலத்தால் இரத்தம் வந்து ரொம்ப கஷ்டப்படுறவங்க எள்ளை இடித்து தூளாக்கி வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சொறி சிரங்குபிரச்சனையெல்லாம் தீரும்.
 
எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசி வந்தால் போதும் இந்த நோய் எல்லாம் போய்விடும். கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், இது இரத்த சோகையை குணப்படுத்தும்.
 
எள்ளை  நன்கு காயவைத்து அது லேசாக வறுத்து பொடி அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கணும் அதுக்கு தேவையான அளவுக்கு பாலு பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் குடித்து வந்தால் ரத்தசோகை சீக்கிரம் சரியாகிவிடும்.
 
எள்ளை வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய்யில் கலந்து தினமும் மூன்று வேளை ஆறு நாள் சாப்பிட்டு வந்தாலே போதும் வயிற்றுப்போக்கு எல்லாம் குணமாகிவிடும்.
 
புதுசா வயதுக்கு வந்த சில பெண்களுக்கு முறையான உதிரப்போக்கு அடிவயிற்றில் வலி இது மாதிரியான பிரச்சனைகள் எள்ளை பொடி செய்து அதை நல்ல தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே போதும் மாதவிலக்கு சீராகும்.
 
மூட்டு வலி உள்ளவர்கள் உடல் வலியையும் வீக்கத்தையும் குறைக்கிறது ரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்துவது முக்கியமான விஷயம்.