செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாடம் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

கர்ப்பிணி பெண்கள் இதை தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

விரைவில் செரிமானம் அடைய தினமும் சாப்பிடுமுன் நெல்லிக்காய் ஒரு துண்டு மென்று அந்த சாறை விழுங்கினால், செரிமான பிரச்சனையில் இருந்து  விடுப்படலாம்.
 
நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை மென்று அந்த சாறை முழுங்கினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை விரைவில் குணமாகும்.
 
நெல்லிகாயில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. அதனால் வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க  உதவுகிறது.
 
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் ஒரு முறைக்கு மூன்று முறை உலர்ந்த நெல்லிகாயை மென்று அந்த சாறை மட்டும் விழுங்கினால் போதும், நெல்லிகாயில்  உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது.
 
நெல்லிகாயில் உள்ள விட்டமின் சி நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை எதிர்த்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது.