தொடர்புடைய செய்திகள்
- வாய் புண் விரைவில் குணம் பெற உதவும் மருத்துவ குறிப்புகள் !!
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் பெறுவது எப்படி...?
- பல்வேறு மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவள்ளி இலைகள் !!
- பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள்...?
- பாரம்பரிய மருத்துவத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள இஞ்சி !!
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் நாவல்பழ விதைகள் !!
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும்.
நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும்.
சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
அடுத்த கட்டுரையில்
