தொடர்புடைய செய்திகள்
- தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமா....?
- எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாத கிரீன் டீயின் நன்மைகள்!!
- கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் இயற்கை பொருள் சீயக்காய்!!
- பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து பாதுகாக்கும் வழிகள்...!!
- பலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி பார்ப்போம்!!
இயற்கையான முறையில் தலைமுடியை பராமரிப்பது எப்படி...?
கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.
கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நரைமுடி நீங்கி முடி கருப்பாகும்.
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேனெல்லாம் செத்து விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும்
தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது சரியாகும்.
அடுத்த கட்டுரையில்
