வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தரும் ஆரோக்கிய குறிப்புகள் !!

ஆஸ்துமாவை குறைக்க அருகம்புல் சாற்றை தினமும் அதிகாலை வேளையில் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்யலாம். 10 துளசி இலைகளை மென்று வரவேண்டும். இதையும் தினசரி செய்யலாம்.

கொஞ்சம் உணவில் மாற்றம் செய்யலாம். தூதுவளை இலைகளில் ரசத்தை வைத்து சாதத்தில் பிசைந்து உண்ணலாம். வில்வ இலையுடன், மிளகை சேர்த்து மென்று  உண்ணலாம். இதன் பிறகு நன்றாக தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். 
 
மாதுளை சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். முசுமுசுக்கை என்ற இலையை நன்றாக வதக்கி பின்பு உண்ணலாம். 
 
மிளகு மூன்று, கற்பூரவல்லி இலை மூன்று, வெற்றிலை இரண்டு  எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வற்றியவுடன் அந்த  நீரை குடிக்கலாம். 
 
ஏலக்காய்  பொடியை நெய்யில்  கலந்து கொள்ள வேண்டும். பின்பு காலை  மற்றும் மாலை வேளைகளில் வெறும் வயிற்றில்  உண்டு வந்தால் சளிப் பிரச்சனைகள்  நீங்கிவிடும். 
 
மஞ்சள் தூள்1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை கலந்து உண்டு வரலாம். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்ப்பிட்டால், இருமல் போன்ற பிரச்சனைகள்   நின்றுவிடும். 
 
கடுகை அரைத்து அதனுடன் தேன் கலந்து உண்டால் காலை வேலைகளில் வரும் வறட்டு இருமல் குறைந்து விடும். ஆடாதோடா இலையை கீரைபோல சாதத்திலும் பிசைந்து உண்டு வரலாம்.