1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ள கறிவேப்பிலை !!

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது வேப்பிலையாகும். உபயோகப் படுத்துகின்றவர்கள் அதில் மருத்துவக் குணம் கறிவேப்பிலையில் வைட்டமின் ‘A’ சத்து மிக அதிகமாக உள்ளது.

அத்துடன் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. கண்களுக்கு வலிமை தருவது ‘A’ சத்தாகும். ஆகையினால் இதனை சட்னியாக தயார் செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் கண் சம்பந்தமான எந்த நோயும் அகன்று விடும்.
 
தேவையான அளவு நார்ச்சத்து உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், மலசிக்கல், சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். கறிவேப்பிலையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் ஒளிரும் சருமம் கிடைக்கும்.
 
கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
 
நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கினை வகிக்கின்றது.கறிவேப்பிலைக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு.
 
தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.
 
உஷ்ணம், அஜீரணம், வாயு காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால் கறிவேப்பிலையைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து அத்துடன் அந்த அளவில் நான்கில் ஒரு பங்கு சீரகத்தையும் சேர்த்து மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும்.
 
மருந்து தின்ற அரைமணி நேரம் கழித்து தேக்கரண்டியளவு சுத்தமான தேனையும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக காலை, மாலை இருவேளையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.