தொடர்புடைய செய்திகள்
- வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்...!!
- துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால் ஏற்படும் பலன்கள்!!
- பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பை சரிசெய்யும் மருத்துவ குறிப்புகள்!!
- வாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்...!!
- சருமத்தை பாதுகாக்கும் அற்புத மருத்துவகுணம் கொண்ட கற்றாழை!!
விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன...?
உங்கள் மூளையில் ஆரோக்கியமான நியூரான்கள் உருவாகுவதற்கும், நியூரான் செல்களுக்கிடையே உள்ள தொடர்புகளை அதிகரிக்கவும் செய்கிறது. அதற்கு நீங்கள் மேற்கொள்ளும் விரதம் தூண்டுகிறது. மேலும் இதனால் பல நோய்கள் ஏற்படுவது குறைக்கப்படுவதோடு, மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.
விரதம் இருந்தால் வயதாவது தடுக்கப்படும். ஆமாங்க நம் உடலில் உள்ள HSH (human growth hormone) அதிகமாக தூண்டிவிடப்படுகிறது. இந்த ஹார்மோன் குறைவு தான் நாம் வயதாகுவதற்கு ஒரு காரணமாம். மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.
விரதம் இருப்பதால் இன்சுலின் அளவை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. சில பேருக்கு தெரியாது எப்ப பசிக்குது எப்ப சாப்பிடனும் என்று. விரதம் உங்கள் பசி செயலை தூண்டும் க்ரெலின் ஹார்மோனை சரிசெய்து உங்கள் பசியின் முறையை ஒழுங்குபடுத்துகிறது.
விரதத்தின் போது சீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுப்பதால் உங்கள் உடல் மற்ற செயல்களுக்கு அந்த எனர்ஜியை கொடுக்கும்.
இறந்த செல்களை நீக்குதல், பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்தல், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளுமாம். இந்த செயல்கள் நேரடியாக உங்கள் சரும அழகிற்கும் உடல் வடியமைப்புக்கும் உதவுகிறதாம்.
விரதத்திற்கு சரியான பயிற்சி இல்லையென்றால் அது உங்களுக்கு துன்பமாக முடியும். கண்டிப்பாக கருவுற்ற பெண்கள், தாய்ப்பாலுட்டும் பெண்கள் விரதத்தை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் அவை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே அவர்கள் விரதத்தை தவிர்ப்பது நல்லது.
அடுத்த கட்டுரையில்
