வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் அஸ்வகந்தா !!

அஸ்வகந்தா ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது, இவை உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க முடிகிறது.

புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். அஸ்வகந்தாவை தவறாமல் பயன்படுத்துவது, புற்றுநோய் கட்சிகளின் வளர்ச்சிதைத் தடுக்கிறது மற்றும்  புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளே இதற்கான காரணமாகும். 
 
தைராய்டு சிகிச்சையில் அஸ்வகந்தா முக்கிய பங்கு வகிக்கிறார். உணவில் அஸ்வகந்தாவை தவறாமல் எடுத்துக் கொள்ளவதன் மூலம் தைராய்டு சுரப்பியின்  செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் தைராய்டு சுரப்பியுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க இயலும். 
 
உடலின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் வலுவாக இருக்க வேண்டும். அஸ்வகந்தா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக சளி  மற்றும் இருமல் பிரச்சினை விரைவாக நீக்குகிறது.
 
அஸ்வகந்தா கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. கண்புரை நோயை எதிர்த்துப் போராடும் சக்தி அஸ்வகந்தாவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள்  ஆராய்ச்சியின் முடிவுகளில் தெரிவித்துள்ளனர். கண்புரைக்கு சிகிச்சையளிக்க, இதனை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். 
 
தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக தோல்  புத்துயிர் பெறுகிறது. மேலும், வறண்ட சருமம் மற்றும் உச்சந்தலையில் உள்ள சிக்கலை நீக்குகிறது. 
 
முடி உதிர்தல் பிரச்சினையை சமாளிக்க  அஸ்வகந்தா மிகவும் முக்கியமான மூலிகையாக கருதப்படுகிறது. இது மெலனின் இழப்பிலிருந்து முடியைப்  பாதுகாக்கிறது. முடி வேர்களை பலப்படுத்துகிறது, இதனால் முடி உதிர்தல் பிரச்சினையை குறைகிறது.