வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!!

வாயுத்தொல்லை, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை இஞ்சிப்பால் குணப்படுத்துகிறது. மேலும் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும்.
இஞ்சிப்பால் செய்யும் முறை:
 
இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.  தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாறு எடுத்து, ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து  கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது கருப்பட்டி சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.
இஞ்சிப்பால் பயன்கள்:
 
* நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றும். வாயுத் தொல்லை என்பது வராது. தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.
 
* இஞ்சிப்பாலை குடிப்பதால் பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கிவிடும். இந்த இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
 
* இதனை 6 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் கண்டிப்பாக  சாப்பிடக் கூடாது.
 
* இஞ்சிப்பாலை குடித்து வருவதால் தொப்பையை படிப்படியாக குறைத்துவிடலாம்.