சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:20 IST)

கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களின் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அதேபோல், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளில் 81 லட்சத்து 173 வாக்காளர்கள் உள்ளனர்.கோவா மா நிலத்தில் 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.