1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (18:05 IST)

உடற்தகுதியில்லாத போலீஸ்கள் பணி நீக்கம் – அடுத்த அதிரடி?

உத்தர பிரேதசத்தில் புதிய புதிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிரடி காட்டி வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு காவலர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளார் யோகி. அதன்படி உடற்தகுதியற்ற மற்றும் ஒழுங்குமுறை புகார்கள் உள்ள காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவின் முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு 7 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 18 சாதாரண போலீஸ்காரர்கள் என மொத்தம் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தகுதியில்லாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் ஆரோக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் போலீஸாரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.