வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (12:37 IST)

தாமரை சின்னத்தை அழுத்தினால் பாகிஸ்தானில் குண்டு விழும்! – துணை முதல்வர் சர்ச்சை பேச்சு!

மக்கள் தேர்தலில் தாமரை சின்னத்தை அழுத்தினால், அது பாகிஸ்தானில் ஒரு குண்டு போடுவதாக அர்த்தம் என பேசியிருக்கிறார் உத்தர பிரதேச துணை முதல்வர்.

மஹாராஷ்டிராவில் நடைபெறும் சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் ப்ரசாத் மவுரியா.

அப்போது பேசிய அவர் “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். மக்கள் தாமரை சின்னத்தை அழுத்துவது என்பது பாகிஸ்தானில் ஒரு குண்டு போடப்படுவதாக அர்த்தம். இந்த தேர்தலில் மராட்டியத்தில் பாஜக கண்டிப்பாக வெற்றிபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீரத்தை முழுவதுமாக பெற்ற பிறகும் பாஜகவினர் பாகிஸ்தான் வெறுப்பை காட்டியே வாக்கு சேகரிக்க முயல்வதாக சில அரசியல் கட்சிகள் ப்ரசாத் மௌரியாவின் பேச்சை விமர்சித்துள்ளன.