1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (11:29 IST)

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவேன்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

parliament
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என மக்களவையில் செயலர் பட்டியலிட்ட  வார்த்தைகளை பயன்படுத்துவேன் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் இதுதான்: ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கேட்  சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறிய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் நான் பேசுவேன் என்றும் முடிந்தால் சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்யட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்  என்பவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது