1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2023 (14:10 IST)

டெல்லியில் வரலாறு காணாத காற்று மாசுபாடு.. நாளை கிரிக்கெட் போட்டி நடக்குமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும்  இரு அணிகளுமே அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் ஆக டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அருண்ஜெட்லீ மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் இன்று ஈடுபடவில்லை. 
 
மேலும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் நிபுணர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நாளைய போட்டி நடைபெறும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.
 
Edited by Siva