1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (14:47 IST)

ஜப்பான் பிரதமர் மரணம்: நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் என மோடி அறிவிப்பு!

modi shinsho
ஜப்பான் பிரதமர் மரணம்: நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் என மோடி அறிவிப்பு!
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே  மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
 ஜப்பான் பிரதமர் மரணத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி தனது நெருக்கமான நண்பர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக ட்விட்டரில் துக்கத்துடன் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்காக நாளை ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்