1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:54 IST)

நாளை மாநிலம் தழுவிய பந்த்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு..!

Karnataka bandh
நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற உள்ள நிலையில் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடக அணைகளில் இருந்து  தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை கண்டித்து நாளை கர்நாடக மாநிலத்தில் பந்து அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்றும் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பெங்களூரில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட்ட பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 நாளைய பந்த் நாளில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva