வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (15:04 IST)

ஓடும் காரில் தொங்கியபடி சென்ற ஊழியர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

வழக்கமாக எல்லா வாகனங்களும் சுங்கச்சாவடியில் நின்று, சுங்கவரிக் கட்டணம் செலுத்திவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால் ஹரியானா மாநிலத்தில் குர்கானில் சுங்கச் சாவடியில் ஒரு கார் நிற்காமல் சென்றதுள்ளது.
எனவே உஷாரான ஊழியர் கார் ஓட்டுநரிடம் சுங்க வரி கேட்டுள்ளார். ஆனால்  அந்தக் கார் ஓட்டுநர் எதுவும் தராமல் வேகமாகக் கிளமியுள்ளார். அப்போது காரின் பொன்னாட்டில் சுங்க ஊழியர் ஒரு தொங்கிக்கொண்டு சிறுது தூரத்துக்குச் சென்றார்.
 
இதனைத் தொடர்ந்து இன்னும் சில ஊழியர்கள் சேர்ந்து அந்தக் காரைப் பிடிக்க முயன்று ஓடினர். ஆனால் பொன்னாட்டில் தொங்கிய ஊழியரை இறக்கிவிட்டு, ஓட்டுநர் காரை பின்னால் திருப்பி அங்கிருந்து வேகமாகத் தப்பிச்சென்றுள்ளார்.
இந்த  காட்சிகள், சுங்கச் சாவடியில் உள்ள  சிசிடிவி மேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.