1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (08:05 IST)

இன்று காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய போராட்டம்: ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல திட்டம்!

congress
காங்கிரஸ் கட்சியை இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்ட் வரி விதிப்பு உள்பட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது
 
இதனை அடுத்து கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் ராகுல் காந்தி உள்பட முன்னணி தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்லவும் காங்கிரஸ் எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
காங்கிரஸ் கட்சி நடத்தும் இன்றைய நாடு தழுவிய போராட்டத்தில் கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது