வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:57 IST)

ஜம்மு – காஷ்மீரில் அமையவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் !

உலகில் பணக்காரக் கடவுள் என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமை உண்டு. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையான் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை இந்தக் கொரொனா காலத்தில் குறைந்துள்ளது.

இந்நிலையில்  அடுத்த இரண்டு வருடங்களில் ஏழுமலையான் கோயிலை ஜம்மு – காஷ்மீரில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்  சுப்பார் ரெட்டி ஜம்முவின் திருமலை  திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ள நிலைத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

இதேபோல் நாட்டில் பல இடங்களில் திருப்பதி ஏழுமலயான் கோவில் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.