வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (08:39 IST)

திருப்பதிக்கு செல்லும் பேருந்துகளிலேயே ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்!

திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்தில் வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

 
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முன்பதிவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலரால் ஆன்லைன் புக்கிங் மேற்கொள்ளப்பட முடியவில்லை. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர பேருந்துகளிலேயே பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தினந்தோறும் ஆயிரம் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என தெரிகிறது.