வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (22:04 IST)

பா.ஜ.க.வை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை – ,முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநிலத்தில் முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான  திரிணாமுள் காங்கிரஸ் கட்சி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அங்கு பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென தீவிரவாகச் சிந்தித்துவரும் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

என்.ஆர்.சி எனப்படும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இதுவரை 19 லட்சம் வங்காளிகளின் பெயரை நீக்கியுள்ளது.

எனவே பாஜகவை விட பெரிய திருடர்கள் எவருமில்லை என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டில் என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும்பெரும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.