1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (23:09 IST)

மக்களைவிட பிரியாணிக்காக அழு...எலும்புகளை முறி ..மகளுக்கு தந்தை எழுதிய கடிதம் வைரல் !

இந்த உலகில் ஆகப் பெரிய கலையும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் சிதையாமல் உள்ளது என்றால் அது எழுத்துதான். அந்த வகையில் எழுத்தில்  அண்ணா, கலைஞர்,  மு.வ, ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை.

இந்நிலையில் டுவிட்டரில் ஒரு தந்தை தன் மகளுக்கு சுறுக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

அதில், இன்று காலை நீ அழுவதைப் பார்த்தேன்.  உன்னைக் கடந்து செல்வபவர்களுக்காக நீ அழுக வேண்டாம். உன் மதிப்பை அறிந்துகொள், மக்கள் போவார்கள் வருவார்கள் ஆனால் உன்னை அவர்களுக்காக மாற்றிக் கொள்ளாதே.

நீ மக்களுக்காக அழுவதை விட பிரியாணிக்காக அழு. உனது உணவுப் பழக்கதில் டயட் கடைபிடி.  ஹனுமான் சலிசா புத்தகம் படி தினமும்.  உன்னை யாராவதும் வம்பிழுத்தால் அவர்களின் எலும்பை உடை மருத்துவமனைக்கு அனுப்பு என்று அதில் எழுதியுள்ளார். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதற்கு லைக்குள் குவித்துள்ளனர்.