சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (13:21 IST)

ஆந்திராவில் நடிகை ரோஜா பின்னடைவு.. ஆட்சியை இழக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி..!

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் அங்கு ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கிட்டத்தட்ட பிடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது என்பதும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது என்பதும் ஜனசேனா கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது என்பதும் பாரதிய ஜனதா கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
எனவே ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகிறார் என்பதும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை இழக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பின்னடைவில் இருப்பதாகவும் அவர் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரை விட சுமார் 20000 வாக்குகள் குறைவாக எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva