1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (14:52 IST)

செகந்திராபாத்தில் போராட்டம் - போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 

 
மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.
 
இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். செகந்திராபாத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.