செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:23 IST)

ஆசிரியருடன் பள்ளி மாணவி காதல்: வகுப்பறையிலே உல்லாசம்!

ஆசிரியருடன் பள்ளி மாணவி காதல்: வகுப்பறையிலே உல்லாசம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவி ஒருவருடன் மிகவும் நெருக்கமாக ஆபாசமாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அந்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
அஸ்ஸாம் மாநிலம் ஹைலக்கண்டி மாவட்டத்தில் உள்ள மாடல் என்ற மேல்நிலைப்பள்ளியில் ஃபைசுதின் லஸ்கர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் தான் பாடம் எடுக்கும் மாணவி ஒருவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
 
அந்த மாணவியை கட்டிப்பிடித்து, நாற்காலியில் காட்டியணைத்தவாறு தவறாக உட்கார வைத்து, முத்தம் கொடுத்து என பல புகைப்படங்கள் எடுத்துள்ளார் இந்த ஆசிரியர். மேலும் இந்த ஆபாச புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.


 
 
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த ஆசிரியருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யாமல் இருந்தனர்.
 
பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தாலும் அவரை கைது செய்யவில்லை காவல்துறையினர். இதனையடுத்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆசிரியர் மீது புகார் அளித்தது.
 
இதனையடுத்து ஆசிரியரிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பள்ளியில் படிக்கும் சக மாணவி ஒருவரே புகைப்படமாக எடுத்துள்ளார்.
 
இவர்களின் இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து தான் அந்த உல்லாசமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ஆசிரியர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.