1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (11:41 IST)

ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கில் ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்பதை எடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 
 
 இந்த நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும்  அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கூடிய மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran