1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (20:34 IST)

கேரளாவில் பரோட்டா சாப்பிட மாணவி உயிரிழப்பு

kerala student
கேரள மாநிலம் வாழத்தோப்பு என்ற பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி பரோட்டோ சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா நிலம் வாழத்தோப்பு பகுதியில் வசிப்பவர் சிஜூ. இவரது மகள் நயன்மரியா(16). இவர் அங்குள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தர்.

இவர், சில நாட்களுக்கு முன் இரவில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால், இவர் உடலில் சில அலர்ஜிகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து,  பெற்றோர் மாணவியை இடுக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.