1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (22:43 IST)

சோனாகச்சி பாலியல் தொழிலாளிகளின் அதிரடி முடிவு: மம்தா கட்சி அதிர்ச்சி

மேற்குவங்கத்தில் இன்று ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்த நிலையில் வரும் 19ஆம் தேதி 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் ஒன்று தான் பாலியல் தொழிலாளிகள் சுமார் 10 ஆயிரம் வசிக்கும் வடக்கு கொல்கத்தா தொகுதி
 
சோனாகட்சியை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் இதுவரை பெரும்பாலும் மம்தா கட்சியினர்களுக்கே வாக்களித்து வந்தனர். ஆனால் அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, குழந்தைகளுக்கு  முழுமையான அரசு திட்டங்கள் ஆகியவைகளை மம்தா அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த முறை பாலியல் தொழிலாளிகள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
 
அதுதான் நோட்டா முடிவு. ஆம், சோனாகச்சியில் உள்ள முப்பதாயிரம் வாக்குகளும் இந்த முறை நோட்டாவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகள் குறிப்பாக மம்தா கட்சி வேட்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.