வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (16:42 IST)

ஷீர்டி மூடப்படுகிறதா? கோவில் தரப்பு விளக்கம்!

மகாராஷ்டிராவில் ஷீர்டி சாய்பாபா கோயில் மூடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம்.
 
நீண்டகாலமாகவே ஷீர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் எது என்பது குறித்த சர்ச்சை இருந்து வரும் நிலையில், பத்ரிதான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா கூறி வருகிறது.  
 
மேலும், பத்ரியின் வளர்ச்சிப் பணிகளுக்காக உத்தவ் தாக்கரே 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் அதிருப்தியில் உள்ள ஷிர்டி அறக்கட்டளை. உத்தவ் தாக்ரேவின் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.  
 
அதோடு, ஷீர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்று கூறிய உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை முதல் ஷீர்டி சாய்பாபா கோவிலை மூடி எதிர்ப்புத் தெரிவிக்க கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆனால், இந்த செய்து பொய்யானது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோவில் மூடப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.