செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By ஆனந்த குமார்

கரூர் ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமையை முன்னிட்டு விஷேச அலங்காரங்கள்

கரூர் ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் குருவாரக் கிழமையையொட்டி கோயிலில் குவிந்த பக்தர்கள்.
கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று குருவாரம் என்றழைக்கப்படும் வியாழக்கிழமையை முன்னிட்டு மூலவர் சாய்பாபாவிற்கும், உற்சவர் சாய்பாபாவிற்கும் விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், சாய்பாபா பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் தூரிகைகளால் பக்தர்களால் சாய்பாபாவிற்கு காட்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு குருவாரக்கிழமையான வியாழக்கிழமையன்று  குருவருள் பெற ஸ்ரீ ஷீரடி சாய்பாபா அருள் பெற்றனர்.