1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. share market todoy also up

இரண்டாவது நாளாக உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

share
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும், 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்றும் 600 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர் 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 30 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்ட நிலையில் இந்த வாரம் மீண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
About Writer
Mahendran