1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (07:53 IST)

ஜூலையில் செமஸ்டர், ஆகஸ்டில் கல்லூரி தொடக்கம்: யூஜிசி தகவல்

'கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என்றும் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் யூஜிசி அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு குறித்த இந்த அறிவிப்பு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு இன்றி இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும்  இன்டர்னல் மதிப்பெண்கள் 50 சதவிகிதமும், முந்தைய பருவ தேர்வு மதிப்பெண்கள் 50 சதவீதமும் என எடுத்துக்கொள்ளலாம் என்றும் பருவத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்களை 100% எடுத்துக் கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
 
மேலும் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவித்துள்ள செய்முறை தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புக்கான செயல்பாடுகளை ஸ்கைப் மூலம் நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது 
 
ஒருவேளிஅ தேர்வு வைக்கும் நிலை ஏற்பட்டாலும் மூன்று மணிநேர தேர்வுக்கு பதில் இரண்டு மணி நேரம் மட்டுமே தேர்வை நடத்தலாம் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற பரிந்துரை ஏற்கப்படவில்லை என்றும் யூஜிசி கூறியுள்ளது