தொடர்புடைய செய்திகள்
- மகனை வரவேற்க அபிநந்தன் பெற்றோர் டெல்லி பயணம்!
- எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி
- அபிநந்தன் எங்கு எப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்? வெளியான விவரங்கள்
- 'இந்தியா - பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி வருகிறது' - டிரம்ப்
- விமானி அபிநந்தன் நாளை விடுவிப்பு – உறுதியளித்தார் பாகிஸ்தான் பிரதமர் !
இந்தியா-பாகிஸ்தான் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து: இந்தியன் ரயில்வே அதிரடி
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகள் முறிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களும், பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
இந்த நிலையில் பாகிஸ்தான் வான்படை, இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்க முயற்சிப்பதும், அதனை இந்திய படை முறியடுத்து வருவதுமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் மார்ச் 3 முதல் அதாவது மறுஅறிவிப்பு வரும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
