1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (09:34 IST)

அஃப்ரிடியின் அரைவேக்காட்டு கருத்துக்கு சச்சின் பதிலடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் அப்ரிடி சமீபத்தில் தனது டுவிட்டரில் இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும், ஐநா இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்

அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு ஏற்கனவே கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, கபில்தேவ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது சச்சின் தெண்டுல்கரும் தனது டுவிட்டரில் அஃரிடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்

நமது நாட்டை நிர்வாகம் செய்ய திறமையான நபர்கள் உள்ளனர் என்றும், நமது நிர்வாகம் குறித்து வெளி நபர்கள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சச்சின் சாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பதிலடிகளுக்கு பதில் அளிக்காமல் அஃப்ரிடி அமைதியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.