1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:02 IST)

திருமணத்திற்கு மறுத்த இளைஞர்; பிறப்பு உறுப்பை வெட்டிய ஆசிரியை! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த இளைஞரின் பிறப்பு உறுப்பை யோகா ஆசிரியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் 35 வயதான பெண் யோகா ஆசிரியை ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில் தனிமையில் அடிக்கடி இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் தான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். அதற்கு யோகா ஆசிரியையான பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்க இளைஞர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளைஞரின் பிறப்பு உறுப்பை அறுத்துள்ளார் அந்த பெண். பின்னர் அவரே இளைஞரை மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார்.

இளைஞர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆன பிறகு பெண்ணின் செயல் குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.