1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (17:28 IST)

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு ..மக்கள் அதிர்ச்சி

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.  10 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய நிலையங்களான எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

அதாவது ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து  ரூ.50 ஆக உயர்ந்துள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் மக்கள் நெர்சலைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.