1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:48 IST)

விறுவிறுப்பான சீரமைப்பு பணிகள், புதன் கிழமை முதல் மீண்டும் ரயில்சேவை: அமைச்சர் தகவல்

ரயில் விபத்து நடந்த இடத்தில் விறுவிறுப்பான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் புதன் கிழமை முதல் மீண்டும் ரயில்சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டதாகவும், ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்,
 
மேலும் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளதாகவும், சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran