வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (18:13 IST)

மோடியின் கொடிய புதிய இந்தியா: ராகுல் காந்தி

ராஜஸ்தான் போலீஸார் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் உயிரிழக்க காரணமாய் இருந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
ராஜஸ்தான் காவல்துறையினர் உயிருக்கு போராடியவரை விட்டு பசு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள ராகுல் காந்தி, மோடியின் கொடிய புதிய இந்தியாவில் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.