வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (13:02 IST)

லக்கிம்பூர் விவகாரம் - குடியரசுத் தலைவரை சந்திக்கும் ராகுல் காந்தி

லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. 
 
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தினால் 8 பேர் உயிரிழந்தனர்.'
 
இந்நிலையில் லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்கிறார். விவசாயிகள் கொலை சம்பந்தமாக நியாயம் கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு அளிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.