தொடர்புடைய செய்திகள்
- ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.
- இந்தி திணிப்பு முயற்சியை கைவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
- ‘ ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை எங்கே?' - ராகுல் காந்தி கேள்வி
- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை சாந்தினி!
- பாகிஸ்தான் நாட்டில் 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்கொடுமை! அதிர்ச்சி தகவல்
பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவித்தது
இந்த குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறுகையில் செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள்
குறிப்பாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிக்கு அவருடைய நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. பெண்களை பிரதமர் மோடி ஏமாற்றியுள்ளார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Edited by Mahendran
