வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூன் 2018 (14:00 IST)

காங்கிரஸ் கஜானா காலி?: நிதி திரட்ட முடிவு!

காங்கிரஸ் கட்சி தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால், இந்த நிலையில் இருந்து மீள பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேர்தல் நெருங்கும்போது கட்சிகளின் நிதி நிலைமையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஆனால், தேசிய கட்சிகளுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. 
 
தற்போது வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் கட்சி முதன்முறையாக நிதி பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அதாவது அனைத்து நிதி நிறுவனங்களும் தங்களது நன்கொடையை பாஜகவின் பக்கம் திருப்பியுள்ளன. இதனால், காங்கிரஸ் கஜானா காலியாகும் நிலையி உள்ளது. 
 
எனவே, கட்சி நிதியாக கட்சி உறுப்பினர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் நிதி கேட்டப்பட்டது. அவர்கல் கைவிரித்துவிடவே வேறு வழியின்றி, கட்சிக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுவது என்று ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம்.