தொடர்புடைய செய்திகள்
- சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்
- புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!
- மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!
- தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!
காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களான காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இன்று ஒரு முக்கிய ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.
சமீபத்தில் அவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்.ஐ.ஆர். மற்றும் இண்டிகோ விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்த சூழலில், கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அவையில் விவாதிக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகள் குறித்தும், தற்போதுள்ள விவாதங்களின் நிலை குறித்தும் ராகுல் காந்தி ஆலோசித்தார்.
குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். விவாதத்தின்போது, தான் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் பதிலளிக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரங்களின் பின்னணியில், இன்றைய ஆய்வுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Edited by Mahendran
